தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகின்றார். திருச்சி விமான நிலையத்தில் 1100 கோடி செலவில் 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த புதிய முனையம் நான்கு நுழைவு வாயில் மற்றும் 12 வழித்தடங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி விமானம் மூலமாக பிரதமர் மோடி திருச்சி வருகின்றார். தற்போது இதற்கான பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர்.