தமிழகத்தில் காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மே தினம் உள்ளிட்ட பல முக்கிய தினங்கள் அன்று மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மேலும் இந்த மாதம் 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், குடியரசு தினத்தை முன்னிட்டும் மதுபான கடைகள் மூடப்பட்டது.

இந்த நிலையில் வருகிற 30ஆம் தேதி காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்படுவதால் அன்றைய தினமும் மது கடைகளுக்கு விடுமுறை விடுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருவதால் இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.