தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆதார் இணைக்கும் பணியானது கடந்த வருடம் நவம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கியது. 2.67 கோடி நுகர்வோரில் இதுவரை 2.20 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜன.,31 கடைசி நாளாகும்.  இதற்கான அவகாசம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது. இந்நிலையில், பிப்ரவரி முதல் ஆதார் இணைத்தால் மட்டுமே, மின் கட்டணம் செலுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.