உணவு பாதுகாப்பு தரச்சான்று சட்டத்தின்கீழ் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிக தடை விதிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. இதனால், தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் கோர்ட் ரத்து செய்துள்ளது. உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.