நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது.

இந்த பரிசு தொகுப்பு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் ரேஷன் கடையின் வாயிலாக வழங்கப்படவுள்ளது. தினசரி 200 -300 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 9-12 ஆம் தேதி வரையிலான 4 நாட்களில் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

சென்ற 3 தினங்களாக தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணியானது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் டோக்கன் பெற முடியாதவர்கள் மற்றும் விடுபட்டு போனவர்கள் ஜன,.13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.