டெல்லியில் இளம்பெண் ஒருவர் சொந்த வீட்டிலேயே நகைகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தமகரை சேர்ந்த சுவேதா தன்னுடைய தங்கை மீது தாயார் அதே அன்பு காட்டியதால் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் தனியாக அறை எடுத்து தங்கிய அவர், கடன் பிரச்சனை காரணமாக தாயிடம் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சிசிடிவி அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.