JEE இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. IIT, NIT போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர JEE நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுதோறும் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்வுக்கு மார்ச் இரண்டாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை nta.ac.in/ என்ற இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.