செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், எந்தவித  அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படியே செறிவூட்டப்பட்ட அரிசி உண்ண வேண்டும் என ரேஷன் கடைகளில் விளம்பர பலகை வைக்கப்படும் என அரசு கூறியுள்ளது. ஆனால் அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்காணிக்கப் போகிறீர்கள்? என விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.