INRAE ​​ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், கோழிகளுக்கும் மனிதர்களைப் போல உணர்ச்சிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு கோழிகளுடைய  நடத்தை முறைகளைப் புரிந்துகொள்ள புதிய வழிகளைக் காட்டுகிறது. மகிழ்ச்சி, உற்சாகம், சோகம் மற்றும் பயம் போன்ற உணர்ச்சிகளைப் பொறுத்து கோழிகள் முகத்தின் நிறத்தை மாற்றுகின்றன என்றும்  அவர் கூறினார்.

கோழிகளின் முகம் துன்பத்தில் இருக்கும் போது அடர் சிவப்பு நிறமாகவும், மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கும்போது வெளிர் இளஞ்சிவப்பு நிறமாகவும் மாறும் என்றும் கூறப்படுகிறது.