உத்தரப்பிரதேசத்தில் தெரு காளை தாக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், அம்ரோஹா மாவட்டத்தின் ஹசன்பூர் பகுதியில் நடந்த சம்பவம், அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு இளைஞர் மீது தெரு காளை தாக்கிய சம்பவம், அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சம்பவம் நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட நபர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென தெருவில் நின்றிருந்த காளை, அந்த நபரை தனது கொம்புகளால் தூக்கி தரையில் வீசும் காட்சி வீடியோவில் தெளிவாக தெரிகிறது. தாக்குதலில், அதிர்ச்சியடைந்த அந்த நபர் தரையில் அமர்ந்து தற்காப்பாக கைகொடுப்பதைக் காணலாம். அருகில் இருந்த ஒருவர் சில நிமிடங்களில் விரைந்து வந்து அவரை எழுப்ப முயற்சிக்கிறார். இதற்கிடையே, காளை அருகிலேயே நின்று பயமுறுத்தும் வகையில் தன் நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
अमरोहा
⬅️ अमरोहा में छुट्टा पशुओं का आतंक जारी
⬅️ सांड ने बुजुर्ग को उछालकर पटका
⬅️ बुजुर्ग को अस्पताल में भर्ती कराया
⬅️ सांड के हमले का सीसीटीवी आया सामने
⬅️ हसनपुर कोतवाली इलाके का मामला#Amroha #AnimalAttack #BreakingNews @amrohapolice pic.twitter.com/jFO3Sja5H3— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) September 2, 2025
தாக்கப்பட்டவர், மொஹல்லா மன்சூர்பூர் பகுதியில் வசிக்கும் நதீம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்துக்குப் பிறகு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நதீம், சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இத்தகைய சம்பவங்கள் திடீரென நடப்பதால், பொதுமக்களிடையே பீதி நிலவுகிறது. மாநிலம் முழுவதும் தெரு மாடுகள் மற்றும் காளைகளை கட்டுப்படுத்தும் திட்டம் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
