சென்னை போக்குவரத்து சேவையில் மின்சார ரயில் பெரும் பங்கு வகித்து வருகிறது .சென்னை நகரத்தில் இருப்பவர்கள் புறநகர் பகுதிக்கு செல்லவும், புறநகரிலிருந்து சென்னைக்கு வருவதற்கும் மின்சார ரயில் பெரிதும் பயன்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை மின்சார ரயில்கள்  ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமும் மின்சார ரயில்கள் ஐந்து முதல் 15 நிமிட இடைவெளியில் சென்னை சென்ட்ரல் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை நாட்களில் 10 முதல் 20 நிமிடங்களில் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.