சென்னை ஐஐடியில் ஸ்ரீவான் சன்னி என்ற மாணவர் விடுதியில் தங்கி கல்லூரி படித்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மற்றொரு மாணவரும் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.