சென்னையில் பொதுவாக முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் வந்து செல்லும்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு இன்று, ஆகஸ்ட் பத்து மற்றும் ஆகஸ்ட் 13 ஆகிய மூன்று நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

எனவே ஒத்திகை நடைபெறும் மூன்று நாட்களும் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம் வரை கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.