ராமநாதபுரத்தில் பாஜக போட்டியிட்டால் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பேன் என்று அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, பாஜக மீதான விமர்சனம் என்பது வேறு கூட்டணி என்பது வேறு. கொள்கைக்கு இடர்பாடுகள் வந்தால் எந்த கூட்டணியாக இருந்தாலும் வெளியேற அதிமுக தயங்கியது இல்லை. எனக்கு கட்சியில் எந்த முக்கியத்துவமும் தேவையில்லை, மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.