தமிழக முழுவதும் கடந்த வருடம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுடைய கல்வி ஊக்குவிக்கவும், அவர்களுடைய ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கல்வி இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டமானது முதற்கட்டமாக 3507 அரசு தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்பட்டது. தற்போது நடந்து முடிந்த 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் படி காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய மேலும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் சந்தித்து பேசிய அமைச்சர், பள்ளிகளில் தற்போது காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆகஸ்ட் 15 முதல் அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர்கள் நன்கு கல்வி கற்று மேன்மை அடைய வேண்டும்” என்றார்.