தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை என முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்களின் போது பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வார இறுதி நாட்கள் ஆன வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அதிக அளவில் பயணிகள் பேருந்தில் பயணிப்பதால் அவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக தமிழகத்தில் இனி வரும் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களுக்கு சென்னையில் இருந்து மட்டுமே கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே திருச்சி, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் உள்ளூர் செல்லும் பயணிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.