சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையில் டிசம்பர் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை விதிகளை மீறியதாக நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் 6670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை மட்டும் போக்குவரத்து காவல்துறையின் கேமராக்கள் மூலம் பதிவான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையின் வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் மூலம் 6670 வழக்குகள் பதிவாகின..