சென்னையில் விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் இடையே மெட்ரோ தடத்தில் அலுவலக நேரத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் மற்ற நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே பரங்கிமலை மற்றும் சென்ட்ரல் இடையே அலுவலக நேரத்தில் பத்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் மற்ற நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் தற்போது மெட்ரோவில் தினமும் காலை ஐந்து மணிக்கு ரயில் சேவை தொடங்கி இரவு 11 மணி வரை இயக்கப்படுகின்றது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுகின்றன. எனவே தற்போது உள்ள மெட்ரோ ரயில் சேவையை நள்ளிரவு 12 மணி வரை நீடித்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் பயணியர் தேவைக்கு ஏற்ப இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சேவையை நள்ளிரவு வரை நீடித்து இயக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். எனவே இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.