ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் சீனிவாசன் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குனர் மற்றும் சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலினை என்ற நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது சிஎஸ்கே வென்ற கோப்பையை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.