இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பதவியை நீக்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவை, நள்ளிரவு அவரே வாபஸ் பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் அமைச்சரவையில் நீடிப்பார் என்று முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் கடிதம் மூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி நீக்கத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என முதல்வர் கூறியிருந்த நிலையில், சட்ட சிக்கல் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆளுநர் திடீரென்று பல்டி அடித்துள்ளார்.