தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் செந்தில் பாலாஜி  அமைச்சர் பதவியில் நீடித்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும்  ஆளுநர் தெரிவித்த நிலையில் இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பதவியை நீக்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவை, நள்ளிரவு அவரே வாபஸ் பெற்றார்.

இந்திய அரசியலில் அமைச்சரை ஆளுநர் பதவி நீக்கம் செய்வது இதுவே முதல் முறையாகும். முன்னதாக கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யலாம் என எச்சரித்திருந்தார். அதற்கு CM பினராயி விஜயன், அமைச்சர்களை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் ஆளுநருக்கு உரிமை இல்லை என பதிலடி கொடுத்திருந்தார்.