திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் சுமார் மூன்று கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்து இறங்கிய ஆண் பயணி ஒருவர் உடலில் மறைத்து கடத்தி வந்த 1.06 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதனைப் போலவே குழந்தையின் கால் சட்டை மற்றும் காலணிகள் ஆகியவற்றுக்குள் மறைத்து கடத்தி வந்த ஒரு கிலோ 872 கிராம் எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ஒரு கோடி 69 லட்சத்து 10 ஆயிரத்து 800 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.