திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டியாப்பட்டியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பிரபாகர் பச்சையம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த பச்சையம்மாள் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.