தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் விவசாயியான பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த மாதம் 30-ஆம் தேதி பச்சையப்பன் தனது தோட்டத்து வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பச்சையப்பன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.