ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்து முதல் நாடு கிராமத்தில் உள்ள எல்லை பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு 46 கிடாய்கள் பலி கொடுத்து கைக்குத்தல் அரிசியில் சமைத்து படையலிட்டு வழிபாடு செய்தனர்.

இந்த திருவிழாவில் கிடாக்களை சுவாமிக்கு முன் பூஜை செய்து பலி கொடுத்த பின், அங்கேயே சமைத்து அதிகாலையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த விருந்தில் சுற்றுவட்டார கிராம ஆண்கள் கலந்து கொண்டனர்.