அரியலூர் மாவட்டம் கீழப்பவலூர் அருகே வீரகாலூரில் நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த ஐந்து பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு பட்டாசு அலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.