உத்தர்காண்ட் மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி முதல் சுரங்கப்பாதையில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்க பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர் மஞ்சித் என்பவரது தந்தை, “மஞ்சித் சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் அங்கு வேலை பார்க்க அனுமதிக்க மாட்டோம். மஞ்சித் எங்களுக்கு ஒரே மகன். அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் நானும் அவரது தாயும் எப்படி உயிரோடு இருப்போம்” என வேதனையுடன் கேட்டுள்ளார்.