இந்தியாவில் நடைபெறும் திருமணங்கள் குறித்து மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பிரதமர், திருமணத்திற்கான பொருட்களை வாங்கும் போது நீங்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தியாவை சேர்ந்த சில பெரிய குடும்பங்கள் தங்கள் இல்ல திருமண விழாக்களை இந்தியாவில் நடத்த வேண்டும். இதனால் நாட்டின் பணம் நமது நாட்டிலேயே இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.