நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் சென்னையில் இரவு ரோந்து மற்றும் கண்காணிப்பு என சுமார் 15,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கோயம்பேடு மற்றும் எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணி ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ள நிலையில் போலீசாருக்கு விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.