கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெர்ப்பயிர்களின் நடுவே வயல்வெளியில் கால்வாய் தோன்றும் பணிகள் என்எல்சி நிறுவனம் சார்பாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு விசாரணையில் என்எல்சி நிறுவனம் தரப்பில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் 88 பேருக்கு தலா நாப்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து பாமக சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் கலவரமானது குறிப்பிடத்தக்கது