கடைகளில் சீஸ் மற்றும் பட்டர் ஆகியவற்றை வாங்கும்போது அது கலப்படமானவயா இல்லையா என்பதை பார்த்து வாங்க வேண்டும். நான் கூடுதலாக சாப்பிடக்கூடிய பொருட்களாக பால் சார்ந்த பொருட்கள் விளங்குகின்றன. இந்த உணவுகள் நம்முடைய வீட்டில் அனேகமாக செய்யப்படுவதில்லை. கடைகளில் தான் வாங்கி பயன்படுத்துகிறோம். சீஸ் நாம் பார்த்து வாங்கும்போது கலப்படமற்ற சீசாக இருந்தால் சீசில் லேசான ஒரு வாசனை இருக்கும். எனவே நீங்கள் கடையிலிருந்து சீஸ் வாங்கும் போது அதில் வாசனை வருகிறதா என்பதை பார்க்க வேண்டும்.

அதனை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆற வைக்கவும். சில நிமிடங்கள் கழித்து அதில் ஓரிரு துளிகள் அயோடின் டிஞ்சர் சேர்க்கவும். சீஸ் நீல நிறமாக மாறினால் அது கலப்படம் செய்யப்பட்ட சீஸ் என்று நீங்கள் அறியலாம். போலியான சீஸ் இறுக்கமாக இருக்கும். அதனை இழுக்கும் போது ரப்பர் போல இருக்கும். சுத்தமான சீஸ் இதுபோல இருக்காது. எனவே கடைகளில் பால் சார்ந்த பொருட்களை வாங்கும் போது இதனை கவனிப்பது அவசியம்.