பிரபல தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர். ஆலியா மானசா. இவர் ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த சீரியலின் நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இந்த ஜோடி தற்போது சின்ன திரையின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

ராஜா ராணி சீரியல் மூலமாக தமிழக மக்களின் மனதை கொள்ளை கொண்ட அவர் அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து வருகிறார். ராஜா ராணி 2 தொடரில் டெலிவரி காரணமாக வெளியேறிய அவர் இப்போது சன் தொலைக்காட்சியில் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். இவருக்கு ஐலா என்ற பெண் குழந்தையும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் “ இனியா” சீரியலில் நடித்து வரும் ஆலியா என்ன தான் ஷீட்டிங் இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில், குழந்தைகளுடன் இருக்கும் வீடியோக்காட்சியொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆல்யா தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு அவரின் மகள் உருது மொழியில் ரிப்ளை கொடுத்துள்ளார்.