சீனாவின் ஹெயிலோங்ஜியாங் மாகாணத்தின் ஜிப்ஸி நகரில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில் 12 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.

சீனாவில் அடிக்கடி சுரங்க விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் நிலையில் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.