இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் இதுவரை எட்டு போட்டிகளில் நான்கு தோல்விகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக கடந்த 23ஆம் தேதி சொந்த மண்ணில் தோற்றது விமர்சனத்திற்கு உள்ளானது. இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் கூறுகையில், தோல்விக்கு ஜடேஜாவை கை காட்டக்கூடாது. அவர் இந்தியாவுக்காகவும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார். போட்டியில் ஸ்டோய்ணிஸ் தான் சென்னையை தோற்கடித்தார் என தெரிவித்துள்ளார்.