ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கோலி-பட்டிதார் அரை சதம் விளாசிய நிலையில், கேமரூன்  கிரீனும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ஷபாஷ் அகமது மட்டும் 40 ரன்கள் வரை எடுத்து இறுதிவரை ஆட்ட இழக்காமல் இருந்தார். இந்த அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. மேலும் ஆர்சிபி அணி இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.