ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. இதனால் பெங்களூர் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பெங்களூர் அணியின் விராட் கோலி அரை சதம் (51) அடித்தார். அவர் 22 ரன்களை எடுத்தபோது நடப்பு ஐபிஎல் தொடரில் 400 ரன்கள் கடந்துள்ளார். இதனால் ஐபிஎல் போட்டிகளில்  அதிக முறை 400 ரன்களுக்கும் மேல் எடுத்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். மேலும் இவருக்கு அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.