ரஜினி, விஜய்க்கு அடுத்ததாக குழந்தைகள், குடும்பங்களைக் கவர்ந்த நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அவர், தற்போது ஒரு படத்திற்கு ரூ.30 கோடி சம்பளமாக வாங்குகிறார். இதனால் அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.120 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ‘அமரன்’ படத்தில் நடித்துள்ள அவர், அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கை கோர்த்துள்ளார்.