சர்வதேச சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது “சிறு குறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது.

சிறு குறு தொழில் துறைக்கு ரூ.1505 கோடி நிதியை திமுக அரசானது ஒதுக்கீடு செய்திருக்கிறது. மேலும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் வாயிலாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். தொழில் வளர்ச்சிக்கு ஓய்வு பெற்ற அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.