சிம்ம ராசி அன்பர்களே….

இன்றைய நாள் உங்களுக்கு காலையில் பணி கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேக வேகமாக சில பணிகளை செய்ய வேண்டி இருக்கும். இந்த நிலை நமக்கு எப்போதும் மாறும் நமது வாழ்வில் எப்போதும் முன்னேற்றம் வரும் என்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். சில காலமாகவே உங்கள் மனதில் ஒரு விதமான கவலை இருக்கும். இதற்கு காரணம் இப்ப இருக்கக்கூடிய சூழல். கண்டிப்பாக நீங்கள் அனைத்து மாற்றத்தையும் சந்திப்பீர்கள். வாழ்க்கையில் ஏற்றத்தையும் சந்திப்பீர்கள்.

இன்று சில விஷயம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில பணிகள் உங்களுக்கு தாமதமாகும் காரணத்தினால் அதை நினைத்து நீங்கள் பயப்பட வேண்டாம். தாமதம் என்பது வெற்றி ஏற்படுத்திக் கொடுக்கும். அது பொறுமை மூலமாக வெற்றியை அமைத்துக் கொடுக்கக்கூடியது. கொஞ்சம் சீரான  மனநிலையில் இருக்க வேண்டும். என்ன ஒன்று இந்த காலகட்டத்தில் உங்களுக்கு உழைப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அந்த உழைப்புக்கு ஏற்றவாறு தான் கூலியும் இருக்கும் .

எது எப்படியோ உங்களுக்கான நல்லது நடந்தேறும் அதற்கு நீங்கள் அவசரப்பட வேண்டாம். இறைவழிபாட்டில் மூழு நம்பிக்கை கொள்ளுங்கள். காரியங்களை அற்புதமாக செய்யுங்கள். மனதை எப்போதும் போல அமைதியாக வைத்துக்கொள்ள பாருங்கள். கடினமான சூழ்நிலையானாலும் நம்முடைய மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் மட்டுமே வெற்றி நிச்சயம். நம்முடைய  தோல்விக்கு முழு காரணமே மன அமைதி இல்லாதது  தான்.

குழப்பங்கள் வரும் பட்சத்தில் தவறான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உருவாகும். எதையும் யோசித்து செய்யுங்கள். சிந்தித்து செயலாற்றுங்கள். குடும்பம் தொடர்பான விஷயங்களில் அதிக அக்கறை இருக்கும் .சூழ்நிலை காரணமாக குடும்பத்தில் பிரிவு ஏற்படக்கூடும் .அதையும் கொஞ்சம் நீங்கள்  புத்தி கூர்மையுடன் சமாளிக்க  வேண்டும். எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள்.

ஆனால் உறவுகளால் உங்களுக்கு சின்ன சின்ன மன கஷ்டம் இருக்கும் செலவுகளும் இருக்கும். இருந்தாலும் எது எப்படியோ மாமன் மைத்துனர் வகையில் உங்களுக்கு ஒரு சில உதவிகள் வந்து கொண்டு தான் இருக்கும் .அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்று இறைவன் அருளும் பரிபூரணமாக இருக்கிறது. இறைவழிபாட்டில் முழு கவனத்தை வையுங்கள். அதிக பணம் செலவு செய்ய வேண்டாம்..சேமிப்பை அதிக படுத்த வேண்டும் .

இன்று முக்கியமாக அடுத்தவர்களுக்கு உதவி செய்கின்றேன் என்று மொயி  சம்பந்தப்பட்ட விஷயத்தில் தெளிவாக இருக்க பாருங்கள். அதிகப்படியான மொய் . செய்வது அடுத்தவருக்கு உதவி செய்வது என்று பணத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம் இதனை நீங்கள் கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் .இதனை சரி செய்து விட்டாலே உங்களுக்கான பிரச்சனை பாதி தீர்ந்துவிடும் .சேமிப்பு உயர்ந்துவிடும்.

இன்று பெண்கள் வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். முக்கியமாக வழக்கு விவகாரங்களில் யாருக்கும் ஆலோசனை கொடுக்க வேண்டாம் .நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க பாருங்கள் .எதையும் யோசித்து செய்ய பாருங்கள். உடல் வலி கொஞ்சம் இருக்கும் .சிம்ம ராசி நேயர்களுக்கு பொதுவாகவே இன்று உடல்வலி கொஞ்சம் முதுகு சம்பந்தப்பட்ட வழிகள் கொஞ்சம் இருக்கும். தோள்பட்டை சம்பந்தப்பட்ட வலி கள் கொஞ்சம் இருக்கும். அதனை சரி செய்து கொள்ள வேண்டும் .

முக்கியமாக உடல் உஷ்ணம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . வாரத்திற்கு ஒரு முறை நீங்கள் என்னை தலைக்கு வைத்து குளிப்பது நன்மை.  தயவு செய்து உடல் உஷ்ணம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.. புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள் வாழ்க்கைக்கு தேவையானதை தெரிந்து கொள்வீர்கள். மொழி சம்பந்தப்பட்ட பாடங்களை நன்கு படியுங்கள். அது மிகவும் முக்கியம். எதிர்காலத்தில் உங்களுக்கு சிறப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் .

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும்.  பச்சை நிறம்  உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் .அப்படியே இன்று காலையில் நீங்கள் எழுந்ததும் நந்தீஸ்வரர் மற்றும் முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு பாருங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2, 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்