கடக ராசி அன்பர்களே….

இந்த நாள் கண்டிப்பாக உங்களுக்கு கனவுகள் நினைவாக கூடும் காரியங்கள் கைக்கூடும். என்ன இன்று மனதிற்குள் ஒரு விதமான கவலை ஓடிக்கொண்டிருக்கும். நமக்கு மட்டும் நல்லது நடக்கவில்லையே என்ற எண்ணம் இருக்கும். நினைத்த வாழ்க்கை கண்டிப்பாக அமையும். சில விஷயங்களில்  நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். கவனம் சிதறல் மட்டும் இருக்கக்கூடாது. எது சரி எது தவறு என்று தீர்மானித்தல் என்பது மன அமைதி மூலமாக கிடைக்கும்.

அதனால் மனதை பதட்டத்தோடும் பரபரப்போடும் வைத்துக் கொள்ள வேண்டாம். எவ்வளவோ நல்ல நேரங்கள் நமக்கு இருந்தாலும் மனம் கொஞ்சம் தெளிவாக இல்லை என்றால் அனைத்து பிரச்சினைகளும் சூழ்ந்து கொள்ளும் .சில விஷயங்களை கூர்ந்து கவனிப்பது முக்கியம். சிலர் உங்களை சங்கடப்படுத்தினாலும் பெரிது படுத்த வேண்டாம். அமைதியாக செல்வது எப்போதும் நல்லது. பொது இடத்தில் அதிகம் பேச வேண்டாம்.

இன்று தொழில் வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பண வரவை வைத்துக்கொண்டு எந்த ஒரு முடிவும் எடுங்கள் ப.ணவரவு சராசரி அளவில் தான் இருக்கும் .அது போதும் என்ற மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சுற்றுப்புற தொந்தரவு  நித்திரை கொஞ்சம் தாமதமாகும் .கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு மாறிவிடும். இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

இன்று கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள் .எதையும் யோசித்து செயல்படுத்துங்கள். கவனமாக இதிலிருந்து மீண்டு விட பாருங்கள். தொழில் வியாபாரத்திலிருந்து போட்டிகள் படிப்படியாக குறையும். பழைய பாக்கிகள் கண்டிப்பாக வசூலாகும் .பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும் .சாமர்த்தியமான பேச்சால் வாடிக்கையாளரிடம் நன்மதிப்பை பெறுவீர்கள்.

பெண்கள் சுயநலத்தில் கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள். பொது நலம் என்பது கண்டிப்பாக நல்லது தான் உடல் ஆரோக்கியத்திலும் பங்கு கொள்ள வேண்டும் .பிள்ளைகள் பற்றிய கவலை ஒரு புறம் இருக்கும். மனதிற்குள் ஒரு விதமான கவலை ஓடிக்கொண்டிருக்கும். பெண்கள் சாமர்த்தியமாக இதிலிருந்து விடுபட வேண்டும். புத்தி கூர்மையுடன் செயல்பட வேண்டும்.

இன்று மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும் .வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் முடிந்த அளவு மாணவர்கள் முயற்சி பண்ணுங்கள். முடியாதது எதுவும் இல்லை எதையும் யோசித்து செய்யுங்கள் .அதுவும் வெற்றி கொடுக்கும். கல்வியியல் முழு ஈடுபாட்டுடன் படித்தால் வெற்றி சுலபமாக கிடைக்கும் .

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே நந்தீஸ்வரர் மற்றும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த பணியிலும் ஈடுபட்டு பாருங்கள் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்டமான எண் : 2, 7  மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்  : வெள்ளை மற்றும் நீல நிறம்