சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெறும் என புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். அடுத்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி பொது தேர்வு நடைபெறும் என்றும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் குடிசை வீடுகள் விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவசம் மின்சாரம் தொடரும். ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்தப்பட்டாலும் இலவசம் மின்சாரம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.