பஞ்சாபில் லூதியானாவில் உள்ள பிரபல உணவகமான பிரகாஷ் தாபாவில் குடும்பத்துடன் ஒருவர் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு சிக்கன் கிரேவி பரிமாறப்பட்ட நிலையில் அதில் எலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இந்த வீடியோ ட்விட்டரில் வைரலானதை தொடர்ந்து உணவகத்தின் மீது சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் உணவகத்தில் உரிமையாளர் அவ்வாறு எந்த ஒரு தவறும் நடக்கவில்லை எனவும் தனது உணவகத்திற்கு கெட்ட பெயர் வரவழைக்கும் விதமாக இவ்வாறு நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உணவகத்தில் உரிமைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.