லேடி சிங்கம் மற்றும் தபாங் காப் என்று அழைக்கப்பட்டு வந்த அசாம் பெண் போலீஸ் அதிகாரி ஜுன்மோனி ரபா விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அசாம் மாநிலம், சருபுகியா கிராமத்தில், அவர் பயணித்த கார் மீது கண்டெய்னர் மோதியதில் அவர் உயிரிழந்தார். பல கடினமான வழக்குகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு லேடி சிங்கம் என பெயர் பெற்றவர். இவர், கடந்தாண்டு ஊழல் செய்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.