சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற மே 21ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் குருவாயூர் செல்லும் விரைவு ரயில் வருகின்றமே 23ஆம் தேதி ஆலப்புழா வழியாக செல்வதற்கு பதில் கோட்டயம் வழியாக செல்லும். அதனைப் போலவே மறுமார்க்கமாக குருவாயூரிலிருந்து மே 22ஆம் தேதி புறப்படும் ரயிலும் இதே மார்க்கத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.