கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்செருவாய் கிராமத்தில் வசிக்கும் சிலர் விரதம் இருந்து ஒரு வேனில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றனர். இதனையடுத்து சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் அதே வேனில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தி.இளமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஜெயந்தி, சுசிலா, காயத்ரி, கவிதா, 2 குழந்தைகள் உள்பட 11 பேர் காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த 11 பேரையும் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.