ஐதராபாத்தில் இருந்து இரும்பு மற்றும் தின்பண்டங்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மணிகண்டன் (27) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மற்றொரு டிரைவர் பிரசாத் (22) இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மணிகண்டன், பிரசாத் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.