சளி சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாதனா என்ற சிறுமியை சளிக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கிருந்த செவிலியர் ஒருவர் இரண்டு ஊசிகள் போட்டுள்ளார். எதற்காக இரண்டு ஊசி போடுகிறீர்கள் என்று கேட்டதற்கு நாய் கடிக்கு இரண்டு ஊசி தான் போடுவார்கள் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சளிக்கு நாய்க்கடி ஊசி போட்டீர்கள் என்று கேட்டுள்ளார்.

ஆனால் நர்ஸ் மலுப்பலாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு சென்ற சாதனாவிற்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமி சாதனா அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதுபோன்ற சம்பவம் சுகாதாரத்துறை மீது நம்பிக்கை இழக்க செய்கிறது. எனவே, அனைத்து மருத்துவமனைகளிலும் முறையாக அரசு ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.