தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் காவல்துறை பிரிவை சென்னையில் இன்று காலை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இது தொடர்பாக பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழ்நாட்டில் ட்ரோன் பிரிவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு கொண்ட ட்ரோன்கள் காவல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் ஐந்து கிலோமீட்டர் தொலைவு வரை இயக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 3.6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் காவல்துறை பிரிவு போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும், பண்டிகை காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கண்காணிப்பு மேற்கொள்ளவும் செயல்படுத்த உள்ளது.