காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகரப் பகுதிகள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் கடை திறக்கும் முன் கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக மது விற்பது அம்பலமாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் இருந்து வாங்கப்பட்ட மதுபானங்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா அல்லது சட்ட விரோதமாக மது தயாரித்து போலீஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டி விற்பனை நடைபெறுகின்றதா என சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.