சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆண்டு மட்டும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பட்டியலை பார்த்தால் அதில் பாஜகவை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். திமுகவில் சிறிய தவறு என்றாலும் கூட அவதூறு பரப்பும் வகையில் பேசினால் உடனடியாக தண்டிக்கப்படுகிறார்கள். பாஜகவை பொறுத்தவரையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.நூறு அண்ணாமலை வந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக 40 இடங்களில் கட்டாயம் வெல்லும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்